Sunday, June 17, 2007

Kizhinchalgal

இறைவன்

இன்று இறைவன் தரிசனம்.
கடலிலும், நதியுலும், தோப்பிலும்
அழகிய அவன் உருவம்.




வேண்டுதல்


பல போர்கள் என்றாய்.
காரணம் மதங்கள் என்றாய்;
மதங்கள் என்ன செய்தன இவற்றில்?
மதத்தின் பெயரால் மனிதர்களின் மனங்களை
பதம் பார்க்கும் சில மிருகங்களின்
விபரீத விளையாட்டில் வந்தவை இவ்வேதனைகள்.
இறைவா -- கல்லாய் இருந்தது போதும்.
எழுந்து வா.
இம்மிருகங்கள் வதை.
அனைத்து பேதங்கள் புதை.
அமைதி வளர வழி செய்.

No comments: